Sunday, September 6, 2009

அகதியின் பயணம் - 1

நிலவுகள்கூட வழமைபோல்
தேய்ந்து பின் வளர்கிறது
அகதிகளின் விடியல்கள்
கேள்விகளாய் கிடக்கிறது.

கனவுகளை இழந்து
காலங்களை தொலைத்து
இருட்டுக்கள் விட்டுச்சென்ற
இசைகளை சுமந்துகொண்டு...

அகதியின் பாடல்கள்
அரங்கை நனைத்திருக்கும்.
அகதியின் முகாம்கள்
இருட்டில் தவமிருக்கும்.

அகதிமுகாமில்
வளர்கின்ற நாட்கள்
ஞாபகத் தோணி
கரைசேரா பயணங்கள்.

நீச்சலைக்கூட
நீக்கமறக் கற்பதற்குள்
கடலுக்குள் குதித்து
கப்பலைத் தள்ளுகிறேன்.

விரலிடுக்குகளில்
ஒட்டியே கிடக்கிறது.
வேண்டாத
இந்த வாழ்க்கை!

No comments: