Saturday, November 14, 2009

இலங்கை அகதிகளுக்கு படிப்படியாக நிரந்தரக் குடியுரிமை: ஸ்டாலின்

நவ. 13:
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு படிப்படியாக நிரந்தரக்
குடியுரிமை பெற்றுத் தரப்படும் என்றார் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின்.
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றிய திமுக செயலர் கே. செல்லக்கண்ணு இல்லத் திருமணத்தையும், அம்மாபேட்டை ஒன்றியச் செயலர் தியாக. சுரேஷ் திருமணத்தையும் வெள்ளிக்கிழமை தலைமையேற்று நடத்தி வைத்து அவர் மேலும் பேசியது:
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் முதல்வர் கருணாநிதி உத்தரவுப்படி அமைச்சர்கள் அண்மையில் ஆய்வு நடத்தினோம். அமைச்சர்களின் ஆய்வு அறிக்கையில் சுட்டிக் காட்டியதைவிடக், கூடுதலாக இலங்கை அகதிகளின் மறுவாழ்வுக்கு முதல்வர் நிதி ஒதுக்கியுள்ளார்.

நன்றி
தினமணி

No comments: